கொரோனா விடுமுறையில் சூரி கூறிய பயனுள்ள யோசனை!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதுவரை சாப்பிட, தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக சுற்றியவர்கள் எல்லாம் கடந்த 10 நாட்களாக வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் முடங்கியுள்ளனர். வீட்டுக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு விடுமுறையில் நடிகர் சூரி ஒரு பயனுள்ள யோசனையை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

சூரி சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது அப்பா, அம்மா, மற்றும் உறவினர்களின் புகைப்படங்களை தனது மகனுக்கும், மகளுக்கும் காட்டி, அவர்களது அருமை பெருமைகளை கூறுகிறார். மேலும் தனது திருமண நாளில் தனது தாயார் தான் தனக்கு தாலி எடுத்து கொடுத்ததாகவும் ‘தாயை விட மிஞ்சிய அய்யரும் இல்லை, ஆண்டவனும் இல்லை என்றும் எல்லாமே நமக்கு பெற்றவர்கள் தான் என்றும் அவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை' என்றும் தனது மகளிடம் அவர் கூறும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

மேலும் அவர் கூறியபோது, ‘இந்த கொரோனா விடுமுறையில் நம்முடைய முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவற்றை எடுத்து நமது குழந்தைகளுக்கு காண்பித்து நம்முடைய முன்னோர் குறித்து அடுத்த சந்ததியினர்களிடம் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் நமது உறவுகள் நீடிக்கும் 'என்றும் சூரி கூறியுள்ளார். சூரி கூறிய இந்த பயனுள்ள யோசனையை பலர் பாராட்டி வருகின்றனர்.

More News

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 601 பேர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

கொரோனாவை கண்டுபிடித்த முதல் தீர்க்கதரிசி இவர்தான்: யோகிபாபு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மனித இனமே அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால்

திடீரென தூய்மையான கங்கை நீர்: எஸ்.ஆர்.பிரபு சுட்டிக்காட்டிய கட்டுரை

கங்கை தண்ணீரை தூய்மை செய்ய சமீபத்தில் மத்திய அரசு 7 ஆயிரம் கோடி செலவு செய்யும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி முதல்கட்டமாக 220 கோடி ஒதுக்கீடு செய்து கங்கையை தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கியது

நாளை விளக்குகளை அணைத்தால் மின்கட்டமைப்பு பழுதாகுமா?  மத்திய அரசு விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாடியபோது ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை

டார்ச்லைட் இருந்தால் போதுமா, பேட்டரி வேண்டாமா? கமல்ஹாசனை கலாய்த்த பாஜக பிரமுகர்

உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பிரதமர் விளக்கேற்ற சொன்னது குறித்து கூறியபோது