close
Choose your channels

இந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது: சூரி டுவிட்

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்த அந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வருகிறார். அப்போது இசைஞானியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்த சூரி இசைஞானியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த தருணம் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:

இசைஞானி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. கோடிக்கணக்கான ரசிகர்களின் பிணி தீர்க்கும் இசை மருத்துவர் இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது என் தாய் தந்தை செய்த புண்ணியம். இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.