ஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி! வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அட்டகாசமாக வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஒருசிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று தங்கள் ஊரின் பெருமைகளை புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காமெடி நடிகர் சூரி இந்த லாக்டவுன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று தனது கிராமம் சம்பந்தமான பல புகைப்படங்களை பதிவு செய்து வந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் சூரி தற்போது தான் வளர்த்து வரும் கருப்பன் என்ற காளை மாட்டை வெளியே கொண்டு வந்து கொண்டு வந்த புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார்

கம்பீரமாக கிராமத்தின் தெருவில் நடந்து வரும் அந்த காளையை பார்த்து ஊரே நடுங்கியதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊரில் உள்ள கண்மாயில் அந்த மாட்டை குளிப்பாட்டி மீண்டும் அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வது போல அந்த புகைப்படங்கள் உள்ளன. இது குறித்து அவர் தனது டுவிட்டரில், ‘ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க கருப்பன் நடந்து போனா’ என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த புகைப்படங்களுடன் கூடிய டுவிட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவிட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

எல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை காலம் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்கள்

உணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை!!!

சிகப்பு கலரில் உணவுகளின் மேல் பரிமாறப்படும் கெச்சப் தற்போது பெரும்பாலான நாடுகளில் பிரபலம் ஆகி இருக்கிறது.

இரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்களில் கணவர் இறந்ததால், தனக்கு ஆதரவு கொடுத்த மாமனாரை மறுமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்!!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாக்கார் யூனிஸ் இந்திய கிரிக்கெட் ஜாம்வனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர்

இரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னரும் இயக்குனர்கள் இன்னும் திருந்தவில்லை என்றும் பல இயக்குனர்கள் இரக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒரு சில முதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் மட்டுமே