வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால்? சூரி சொன்ன அசத்தல் பதில்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக பல ஆண்டுகள் நடித்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த ’விடுதலை’, ’விடுதலை 2’, ’கருடன்’, ’கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல், சமீபத்தில் வெளியான ’மாமன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இனிமேல் அவர் ஹீரோவாக தான் நடிப்பார் என்றும், காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகின்ற நிலையில், நடிகர் சூர்யா நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "மாமன் படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். குடும்பம் குடும்பமாக வந்து இந்த படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்த படமும் குடும்பம் சார்ந்த ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும்," என்று தெரிவித்தார்.
மேலும், "தற்போது கதாநாயகனாக என்னை வெற்றி அடையச் செய்து விட்டீர்கள். இன்றைக்கு எல்லோருக்கும் பிடித்த சூரியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன். உங்களில் ஒரு ஹீரோவாக இருக்கவும் ஆசைப்படுகிறேன்," எனவும் அவர் கூறினார்.
"வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த சூரி "இதுவரை வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்," என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சூரியை வில்லனாகவும் விரைவில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com