close
Choose your channels

சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியபோது, 'விமானத்தில் கோஷமிட்ட அந்த பெண் யார் என்பது பற்றி விசாரணை செய்ய வேண்டும். அவர் கனடாவில் படித்து கொண்டிருப்பதால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனெனில், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் பாசிஸ்ட் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

பாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும். எனவே அவரது கைது நியாயமானதுதான்"

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.