close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' பணியை ஆரம்பித்த ரஜினியின் மகள்!

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை ஒருபக்கம் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரிஸ் வடிவில் தயார் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் முயற்சித்து வருகிறார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். உலக அளவில் பிரபலமான எம்.எக்ஸ் பிளேயர் என்ற நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது இதுகுறித்த பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அப்டேட்டுக்களை அவ்வப்போது வெளியிடவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே 'கோச்சடையான்' என்ற சரித்திர படத்தை இயக்கிய அனுபவம் உள்ள செளந்தர்யா, 'பொன்னியின் செல்வன்' வெப் சீரிஸையும் சிறப்பாக உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.