close
Choose your channels

கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Thursday, January 6, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் இருக்கும் வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

மேலும் 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கங்குலிக்கு பரிந்துரை செய்திருக்கின்றனர். இந்நிலையில் கங்குலியின் செல்ல மகள் சனாவிற்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது கங்குலியின் மனைவி டோனாவிற்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது.

ஆனால் கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, அவருடைய கசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மைத்துனி ஜாஸ்மின் கங்குலி ஆகிய 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்ட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.