தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரியின் முக்கிய அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக தனி அதிகாரியின் பொறுப்பில் உள்ள நிலையில் சற்றுமுன் தனி அதிகாரி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்‌ காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே முடங்கியுள்ளது. திடீர்‌ என்று அறிவிக்கப்பட்ட படப்பிடிப்பு தடையால்‌ நடிகர்‌ சங்க உறுப்பினர்களில்‌ துணை நடிகர்கள்‌ . நடிகைகள்‌, அனைத்து மாவட்டத்தை சேர்ந்த நாடக நடிகர்கள்‌ மற்றும்‌ மாதந்தோறும்‌ ஓய்வு உதவி தொகை பெரும்‌ மூத்த கலைஞர்கள்‌ ஆகியோர்கள்‌ தினசரி வாழ்வாதாரம்‌ இன்றி தவித்து வருகின்றனர்‌.

நடிகர்‌ சங்கத்தில்‌ 70 சதவீத உறுப்பினர்கள்‌ அன்றாடம்‌ நடைபெறும்‌ சினிமா படப்பிடிப்பு பணிகளையே நம்பி இருப்பவர்கள்.‌ தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும்‌ பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்‌ சம்மேளனம்‌ பெப்சி சார்பில்‌ இன்று பெரிய நடிகர்களிடம்‌ உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும்‌ வந்துகொண்டிருக்கின்றன இந்நிலையில்‌ இச்சங்கத்தின்‌ முன்னாள்‌ நிர்வாகிகளும்‌ மற்றும்‌ சில உறுப்பினர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய சூழ்நிலையை கருத்தில்‌ கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது

இதனை பரிசீலனை செய்யும்போது நமது சங்கத்தில்‌ உள்ள உறுப்பினர்கள்‌ பலரும்‌ வேலை வாய்ப்பின்றி மிகவும்‌ சிரமப்பட்டு வருகிறார்கள்‌ என்பது தெரிய வருகிறது. எனவே அவர்களின்‌ அன்றாட அத்தியாவசிய தேவைகளை புர்த்தி செய்ய வேண்டியதும்‌, அவர்களுக்கு உதவுவதும்‌ நமது தலையாய கடமையாகும்‌. நமது சங்கத்தை சேர்ந்த நல்ல உள்ளம்‌ கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்‌ கீழ்க்கண்ட நடிகர்‌ சங்க வங்கி கணக்கில்‌ தங்களால்‌ இயன்ற நிதியை வழங்கி உதவிடுமாறு தங்களை அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

இவ்வாறு தனி அதிகாரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

'பேட்ட' நடிகரின் திருமணத்தில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.

இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்: பிக்பாஸ் நடிகையின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை: ராணுவத்தை வரவழைக்கவிருப்பதாக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் நேற்றில் இருந்தே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

சென்னையில் மேலும் 3 கொரொனா நோயாளிகள்: மொத்த எண்ணிக்கை 15 ஆனது

கொரோனா வைரஸால் நேற்று மூவர் தாக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் மேலும் மூவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது

டாஸ்மாக் கடைகளில் வரலாறு காணாத கூட்டம்: 8 நாட்களுக்கும் சேர்த்து வாங்கும் குடிமகன்கள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று மாலை 6 மணியிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவை