close
Choose your channels

100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்: யார் டாப் தெரியுமா?

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்களின் சம்பளம் நூறு கோடி என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல் மகேஷ்பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் போன்றவர்களின் சம்பளமும் மிக அதிகம்.

ஆனால் அதே நேரத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் மிகவும் குறைவாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே உள்பட ஒரு சிலர் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் நூறு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 165 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 19 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார் என்பதும் தற்போது இவர் சுமார் 5 கோடி முதல் 8 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவை அடுத்து தமன்னா 110 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வரும் தமன்னாவுக்கு ஒரு திரைப்படத்திற்கு 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

’பாகுபலி’ உள்பட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்காவின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் தெரிகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவும் கோடீஸ்வர நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 89 கோடி என்று கூறப்படுகிறது. வெகுவிரைவில் இவர் ரூ.100 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகையான சமந்தா ஒரு திரைப்படத்திற்கு 3 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் உள்ளனர். பூகா ஹெக்டேவின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என்றும், ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.28 கோடி என்றும் கூறப்படுகிறது. இருவருமே தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.