close
Choose your channels

சந்தானம் படத்தில் இணைந்த சிவாஜி-எம்ஜிஆர் நாயகி: 400வது படம் என தகவல்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘உயர்ந்த மனிதன்’, ‘பார் மகளே பார்,’ 'புதிய பறவை’, ‘எங்கள் தங்க ராஜா’, ‘பாலும் பழமும்’, ‘பாவை விளக்கு’ உள்பட பல படங்களிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ‘ஒளிவிளக்கு’, ‘பணம் படைத்தவன்’ படங்களிலும் மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி.

கடந்த 1954ம் ஆண்டு ’பணம் பத்தும் செய்யும்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து சாதனை செய்துள்ளார். இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படம் அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சந்தானம், இயக்குனர் கண்ணன் உள்பட படக்குழுவினர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து செளகார் ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மசாலா பிக்ஸ் அசோசியேஷன் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.