விபத்தில் சிக்கிய எஸ்.பி.வேலுமணி கார்...!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

பாரத பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கார் விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம்,தாராபுரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றவுள்ளார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது மகனுடன் கோவையிலிருந்து, திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார். கொடுவாய் அருகில் செல்கையில் வாகனங்கள் வரிசையாக மோதியதில் அமைச்சரின் கார் விபத்துக்குள்ளானது.

கார் மட்டும் சேதமடைந்த நிலையில், உள்ளிருந்த அமைச்சர், அவரின் மகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த காயமும் படவில்லை. இதனால் இவர்கள் வேறு காரில் பிரச்சார கூட்டத்திற்கு சென்றனர்.