ஒரே ராக்கெட்டில் 60 செயற்கைக்கோள்… விண்வெளியில் புது புரட்சி!!!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

 

ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா, சீனா, ஜப்பான், அமெரிக்கா புதிதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப் பல நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு விண்வெளி ஆய்வில் புது முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு நடுவில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று ஒரு ராக்கெட்டில் வைத்து 60 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் பறக்க விட்டு இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான spaceX நாசாவுடன் இணைந்து சமீபதில் விலை குறைந்த விண்கலத்தை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. இந்தச் சாதனை உலம் முழுவதும் பெரும் வியப்பாக பார்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்நிறுவனம் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 2 செயற்கைக்கோள்களை மிக வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

இப்படி அடுக்கடுக்கான வெற்றி படிகளில் பயணித்து வரும் இந்நிறுவனம் உலகின் அதிவேக இணைய சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது பல புதிய செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இணைய சேவையில் புது புரட்சி செய்ய நினைக்கும் அந்நிறுவனம் star link எனப்படும் தனது புதிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதற்காக 1,440 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியாக வேண்டும் என்றும் இத்திட்டத்திற்காக இதுவரை 15 முறை பல செய்ற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது.

தற்போது 16 ஆவது முறையாக கேப் கேனவெரல் எனம் விண்வெளி விமான நிலையத்தில் இருந்து பால்கன்9 எனும் ராக்கெட்டில் வைத்து 60 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பி இருக்கிறது. இதையும் சேர்ந்து star link திட்டத்திற்கு இதுவரை 955 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டு அது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்றும் தகவல் கூறப்படுகிறது.

More News

நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்!!!

தூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்? ஒட்டுமொத்த எவிக்சனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு அனைத்து போட்டியாளர்களும்

ஷிவானி கூட நிக்க வச்சு கேள்வி கேட்குறாங்கப்பா: பைத்தியம் பிடிக்கும் நிலையில் ரியோ!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒரு போட்டியாளரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு டார்கெட் செய்வது அதிகமாகி வருகிறது, முதலில் ஆரியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும்

நடுரோட்டில் பாட்டு பாடியபடி படகில் செல்லும் தமிழ் நடிகர்!

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் கனமழை பெய்து அதன் காரணமாக சென்னை