close
Choose your channels

ஸ்பெயின் துணை பிரதமருக்கு கொரோனா: சீனாவை முந்திய சோகம்

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும் சீனாவில் தற்போது அந்த வைரஸ் கட்டுக்குள் அடங்கியுள்ளது., கடந்த சில நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சீனாவில் இருந்து பரவிய இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடு உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளது. மேலும் உலகிலேயே அதிக நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நாடாக இத்தாலி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது இடத்தை ஸ்பெயின் பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மட்டும் இதுவரை 3647 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் மொத்தம் 49 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் அதிர்ச்சி தரும் மற்றொரு செய்தியாக ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை பிரதமர் கர்மேன் கால்வோ அவர்களின் அலுவலகம் கூறியபோது ’துணை பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கும் கொரோனா தொற்றியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.