கொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி

உலகம் முழுவதும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஏழை முதல் பணக்காரர்கள் வரை, சாமானியர் முதல் உலகத் தலைவர்கள் வரை கொரோனா வைரஸ் தாக்கி வருவது தெரிந்ததே. உலக தலைவர்கள் பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக பிரேசில் நாட்டு அதிபரின் செயலாளர், கனடா பிரதமரின் மனைவி, பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர், ஈரான் நாட்டின் துணை அதிபர், ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவி மற்றும் பிரிட்டன் நாட்டின் இளவரசர், பிரிட்டனின் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா என்பவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 1933ஆம் பிறந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா, ஸ்பெயினில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த இளவரசியின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளியன்று நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 72 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பலியாகியுள்ள

இந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

சென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்சை ஓட்டும் பணியில் உள்ள ஓட்டுனராக இருப்பவர் பாண்டித்துரை.

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 

எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது இந்திய மக்கள் கோடிக்கணக்கான பேர் வரலாற்றிலேயே முதல்முறையாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவிடும் வகையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகையாக ரூ.500 கோடி நிதியுதவி