close
Choose your channels

பிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி

Sunday, November 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடியின் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில்‘பிரதமர் மோடி அவரக்ளின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பிரதமரின் பாதுகாப்பு வீரர்கள் தன்னிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு அதற்குரிய டோக்கன்களை கொடுத்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில் சில பாலிவுட் பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்தார்கள். அவரகளுக்கு மட்டும் செல்போன் எப்படி அனுமதிக்கப்பட்டது? ஏன் இந்த பாரபட்சம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பிரதமரின் மற்றொரு நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் யாருக்கும் அழைப்பில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது எஸ்பிபி அவரகளின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.