எஸ்பிபி முதலில் பாடியது எனக்குதான், எம்ஜிஆருக்கு அல்ல: சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருடன் பழகிய நாட்கள், நேர்ந்த அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

அந்த வகையில் பழம்பெரும் நடிகரான சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார். எஸ்பிபி அவர்களின் முதல் பாடல் எம்ஜிஆர் நடித்த ’அடிமைப்பெண்’ படத்தில் இடம்பெற்ற ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான் என்றும், எஸ்பிபியின் முதல்பாடல் ஜெமினி கணேசன் நடித்த ’சாந்தி நிலையம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான் என்றும் கூறப்பட்டது

ஆனால் இந்த இரண்டு பாடல்களும் எஸ்பிபியின் முதல் பாடல் அல்ல என்றும் ரிலீஸ் வகையில் பார்த்தால் தன்னுடைய ’பால்குடம்’ படத்திற்காக எஸ்பிபி பாடிய ’மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என்றும் நடிகர் சிகுமார் கூறியுள்ளார்

1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ’பால்குடம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதாகவும், இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல், அடிமைப்பெண், சாந்தி நிலையம் பாடல்களுக்கு பின்னர் ரிகார்டிங் செய்யப்பட்டாலும், ’பால்குடம்’ படம் முதலில் ரிலீஸானதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும் என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் எஸ்பிபியுடன் நிகழ்ந்த ஒரு சில நிகழ்வுகளையும் அந்த வீடியோவில் சிவகுமார் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரபல வில்லன் நடிகர்: வீடியோ வைரல்

கடந்த சில வாரங்களாக திரையுலகினர் இடையே கிரீன் இந்தியா சேலன்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பது தெரிந்ததே,

அஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் ஹாலிவுட் கலைஞர்: பரபரப்பு தகவல்

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இண்டர்போல் அதிகாரி கேரக்டரில் நடித்து வரும் அஜீத்துக்கு

அவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை, ஆனால் எனக்கும் உரிமை இருக்கிறது: எஸ்பிபி குறித்து விஜய்சேதுபதி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

கொரோனா நேரத்தில் அலுவலகங்கள் அதிக ஆபத்தானவை ஏன்??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

கொரோனா நேரத்தில் சமூக இடைவெளி, தனிநபர் பாதுகாப்பு, முகக்கவசம், சானிடைசர் போன்ற வார்த்தைகள்

மக்கள் நெஞ்சில் ஏகபோக வரவேற்பை பெற்ற தமிழக முதல்வர்!!! மீண்டும் தலைமையேற்க ஆதரவு!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து அதிமுகவை வழிநடத்தி வரும் ஒரு மாபெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.