close
Choose your channels

பாடகர் எஸ்பிபி மிகவும் கவலைக்கிடம்: இசை ரசிகர்கள் அதிர்ச்சி!

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட உயர்ரக சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து அவர் குணமடைந்ததாக அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும் நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் தனியார் மருத்துவமனை தரப்பில் இருந்து தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி எஸ்பிபி அவர்கள் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. மேலும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எழுந்து உட்கார்ந்துதாகவும் சைகை மூலம் உறவினர்களிடம் பேசியதாகவும் வெளிவந்த தகவலால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் திடீர் அதிர்ச்சியாக பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுளதாகவும், அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இந்த தகவல் காரணமாக எஸ்பிபி அவர்களின் கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எஸ்பிபி குணமடைய அனைவரும் மீண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.