close
Choose your channels

கடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி!

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது. குறிப்பாக இளையராஜா அவர்கள், எஸ்பிபியுடன் சிறுவயது முதலே நட்புடன் இருந்துள்ளார் என்பதும் அவருடைய இழப்பை இளையராஜாவால ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் கடைசியாக இளையராஜாவுக்கு முத்தமிட்ட தகவல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது. எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவருடைய மகன் சரண், எஸ்பிபி நலம் பெற வேண்டி பிரபலங்கள் கூறிய பல வீடியோக்களை போட்டுக் காண்பிப்பாராம்.

அப்போது எஸ்பிபி அவர்கள் தனது மகனை அருகில் அழைத்து இளையராஜாவின் ’பாலு எழுந்து வா’ என்ற வீடியோவை போட்டு காண்பிக்கும்படி கூறியதாகவும், அந்த வீடியோ ஓடிக்கொண்டிருந்தபோது, இளையராஜாவுக்கு எஸ்பிபி முத்தமிட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.