close
Choose your channels

எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு: என்ன ஆச்சு?

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகர் எஸ்பிபி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் அந்த மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் பாடகர் எஸ்பிபி சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை எஸ்பி சைலஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வந்திருப்பதும், மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூடுதல் காவல் ஆணையர் அருண் அவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.