நீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை!!!

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 சட்டப்பிரிவின் கீழ் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து இருக்கிறார். இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் பயன்பெறும் விதமாக சில சலுகைகளை அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளார்.

இந்தச் சலுகையானது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் உள்ஒதுக்கீடு வழங்குவதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த அளிவிலான இடங்களையே பெற்று வந்தனர். இதைக் கண்காணிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஆய்வும் நடத்தப் பட்டது. இந்த ஆய்வுமுடிவுகள் வெளியானதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு சட்டத்தின் மூலமாகப் பலர் பயன்பெறுவர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக கிராமங்களில் பயிலும் மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் எனவும், உள்ஒதுக்கீடு கிடைக்கும்போது அதிக மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வசதி செய்து கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பல முனை போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு தற்போது இந்த உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும்.

விடுமுறைக்காக கொரோனா வதந்தி பரப்பிய இருவர் கைது: சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கள்: மீண்டும் அண்ணாச்சி கடைக்கு மாறும் பொதுமக்கள்! 

ஒரு காலத்தில் மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கை கொடுத்தது அண்ணாச்சி கடைதான். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் வந்தபின்னரும்,

நாளை டாஸ்மாக் மூடப்படும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்த வேண்டுமென சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தன்னை திட்டியவர்களுக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

சமீபத்தில் வெளியான 'வால்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.