close
Choose your channels

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

Tuesday, April 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது. இதனை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்த நிலையில் மே 1ஆம் தேதி அதாவது நாளை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்று தனி அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

நான் 26.01.2019 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலர் பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் 01.05.2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சங்கப்பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்ற விவரம் இதன்மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.