close
Choose your channels

கணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் திங்களன்று 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வை எழுதிய சுப்ரியா என்ற மாணவி கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக அவரது மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

தான் கணித தேர்வை மிகவும் நன்றாக எழுதியிருந்ததாகவும், 100க்கு 100 மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்த தனக்கு தன்னுடைய மதிப்பெண் பட்டியலில் கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து சுப்ரியா தனது பெற்றோர்களின் அறிவுறுத்தலின்படி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் அவர் எதிர்பார்த்தபடியே கணிதத்தில் அவருக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் சுப்ரியா மகிழ்ச்சி அடைந்துள்ளார். கணிதம் மட்டுமின்றி அனைத்து பாடங்களிலும் சுப்ரியா 90க்கும் மேல் மதிப்பெண்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மாணவி சுப்ரியா பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் அவருடைய பேப்பரை பார்க்காமலேயே வெறும் இரண்டு மதிப்பெண்கள் மட்டும் அளித்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற வேறு ஒரு மாற்றுத்திறனாளிக்கு இதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்றும் சுப்ரியாவின் தந்தை கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.