உயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது குஜராத் நீதிமன்றம். இப்படியொரு விசித்திர வழக்கை அந்நீதிமன்றம் வெறும் 15 நிமிடங்களில் தீர்த்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்தப் பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனாவின் தீவிரத்தால் தற்போது அவர் உடல்உறுப்புகள் செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் தனது கணவரின் விந்தணுக்களை சேகரித்து தருமாறு அந்த இளம்பெண் மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கவே அவர் குஜராத் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் மருத்துவ ரீதியாக இதற்கு சாத்தியம் இருந்தால் உடனடியாக செய்யுங்கள் என உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் வெறும் 15 நிமிடங்களில் இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து முடித்ததாகவும் கூறப்படுகிறது. கணவரின் உடல்நிலை காரணமாக மனைவி செய்த இந்த பாசப்போராட்டம் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த கணவரின் விந்தணுவிலும் பாதிப்பு இருக்குமா எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிற்கே குறைந்து போகிறது. மேலும் இதுபோன்ற குறைபாடு சிலருக்குத்தான் ஏற்பட்டு இருக்கிறது.

எனவே ஐவிஃப் முறையில் பாதுகாப்பாக செயற்கை கருவூட்டல் செய்யமுடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் உயிருக்குப் போராடும் தனது கணவரின் விந்தணுவிற்காக மனைவி நடத்திய பாசப் போராட்டத்தை நினைத்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா? 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஜீன்ஸ் அணிந்த குற்றத்திற்காக குடும்ப உறுப்பினர்களே

விஜயபாஸ்கரிடம் சிக்கிய ஆவணங்கள்...! வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....!

விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

4 வருடங்கள் கழித்து பிரியாமணி திருமணத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'பருத்திவீரன்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி.

'எதற்கும் துணிந்தவன்' 3வது லுக்: சூர்யா ரசிகர்களுக்கு இன்று செம விருந்து!

நடிகர் சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. 'எதற்கும் துணிந்தவன்' என்று இந்த படத்திற்கு டைட்டில்