ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார்: ஒடுக்கத்தூர் மகான் மற்றும் வேல் மாறல் பற்றிய ஆழமான உரைகள்

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார்,ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில், ஒடுக்கத்தூர் மகான் பற்றியும், அவரது அற்புதங்கள் பற்றியும் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி, பார்வையாளர்களை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

விஜயகுமார் தனது பேட்டியில், ஒடுக்கத்தூர் மகானின் வரலாற்றையும், அவருக்கு முருகன் கடாட்சம் கிடைத்ததையும் விவரிக்கிறார். மேலும், ஒடுக்கத்தூர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது கிருபானந்த வாரியார் என்பதையும், கோவிலில் நடந்த அற்புத அனுபவங்களையும் பக்தியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒடுக்கத்தூர் மகானின் கண்களில் இருந்த தீட்சண்யத்தை பற்றியும், அவரை தரிசித்தவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்களையும் விஜய்குமார் விவரிக்கிறார். நோய்கள் நீக்கப்பட்டது, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைத்தது போன்ற அற்புதங்களையும் அவர் எடுத்துரைக்கிறார்.

மேலும், கிருபானந்த வாரியார் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பேசிய மேடையில் தானும் பேசிய அனுபவத்தை விஜய்குமார் பகிர்ந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, வேல் மாறல் படிப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களையும் விளக்குகிறார்.

குறிப்பாக, தன்னை ஒடுக்கத்தூர் மகான் கோவிலுக்கு அழைத்த முருகன் பற்றியும், ஒடுக்கத்தூர் சுவாமிகளின் வரலாற்றையும் விவரிக்கிறார். முருக பெருமானின் பெருமைகளை பற்றி பேசி மெய் சிலிர்க்கிறார் விஜய்குமார்.

சித்தர்களின் தரிசனம் என்ன செய்யும் என்பதையும் விளக்குகிறார் அவர். பழனியில் போகர் சித்தர் மற்றும் திருவண்ணாமலையில் ரமண மஹரிஷி பற்றியும் கூறுகிறார். இறுதியாக, சித்தர்கள் உங்களை அழைப்பார்கள் என்று கூறி, பார்வையாளர்களை ஒடுக்கத்தூர் மகான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அழைக்கிறார் விஜய்குமார். மேலும், வேல் மாறல் படித்து முருகன் அருளை பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1