close
Choose your channels

அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் வெள்ளியன்று விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் சரமாரியாக மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலை அஜித் ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டே ‘வலிமை’யை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதி வரும் நிலையில் படக்குழுவினர்களும் ரசிகர்களை அவ்வப்போது கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ஒரு நல்ல பாம்பு, நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என பதிவு செய்த ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தற்போது ‘கைதி’ டிக்கெட் எடுத்த ரசிகர் ஒருவரை ‘தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ’ என்று கலாய்த்துள்ளார்.

ஒரு டுவிட்டர் பயனாளி தான் ‘பிகில்’ படத்திற்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வதற்கு பதிலாக தெரியாமல் ‘கைதி’ படத்தின் டிக்கெட்டை புக் செய்து விட்டதாகவும், அந்த டிக்கெட்டை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்குத்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மேற்கண்டவாறு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.