மூன்றாவது குழந்தைக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா.. திரையுலகினரின் குவியும் வாழ்த்துக்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ஸ்ரீலிலா ஏற்கனவே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது ஆக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் ஒருவரான ஸ்ரீலீலா, டாக்டர் படிப்பை முடித்துவிட்டு திரை உலகிற்கு வந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகமானாலும், தற்போது தெலுங்கு திரையுலகில் தான் அவர் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள அவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீலீலா கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது ஆக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
’எங்கள் வீட்டிற்கு ஒரு புதுமுகம் வந்துள்ளார்’ என்று அவர் கூறியிருப்பதை அடுத்து, அவரது இந்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவரது இந்த பதிவிற்கு ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான லைக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments