16 வயது சிறுமி உள்பட 100 பெண்களை சீரழித்த தயாரிப்பாளர்: ஸ்ரீரெட்டி திடுக் தகவல்

  • IndiaGlitz, [Monday,April 16 2018]

டோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீரெட்டி, பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில் இயக்குனர் கொரட்டலா சிவா, நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம், எழுத்தாளர் கோனாரெட்டி உள்பட பலர் அடங்குவர்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் அப்பாரெட்டி என்பவர் 100 பெண்களுக்கும் மேல் பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர்களில் 16 வயது சிறுமிகளும் அடங்குவர் என்றும் திடுக்கிடும் தகவல் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் புகாரை அடுத்து பல இளம்பெண்கள் ஒரு டிவி சேனலுக்கு போன் செய்து அப்பாராவ் தங்களை பாலியல் டார்ச்சர் செய்தது உண்மைதான் என தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி கூறியதில் எந்த உண்மையும் இல்லை என தயாரிப்பாளர் அப்பாரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் யார் யார் தலை ஸ்ரீரெட்டியால் உருளப்போகிறது என தெலுங்கு திரையுலகே டென்ஷனில் உள்ளது.

More News

டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறாரா காயத்ரி ரகுராம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அவரை வில்லன் போல் பார்த்த பொதுமக்களும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன்: அரவிந்தசாமி

கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து கோலிவுட் திரையுலகினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும்

தாய்ப்பாலும் நதிநீரும் ஒன்றுதான்: காவிரி விவகாரம் குறித்து பிரபல நடிகர்

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் பொதுமக்களும், மாணவர்களும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும்: நடிகை வரலட்சுமி ஆவேசம்

ஜம்முகாஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில்

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டன் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்