விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்: ஸ்ரீரெட்டி


Send us your feedback to audioarticles@vaarta.com


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் குறித்து சமீபத்தில் வரலட்சுமி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகினை அலற வைத்த ஸ்ரீரெட்டியும் தனது பங்கிற்கு விஷால் குறித்து சில அதிரடி கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார் என்பது தனக்கு தெரியும் தெரியும் அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால், அவர் எந்த பெண்ணையும் ஏமாற்ற வில்லை என்பதை நிரூபிக்கட்டும் என்று கூறிய ஸ்ரீரெட்டி, 'விஷால் ஒரு ஏமாற்றுவாதி என்றும் தன்னுடைய அம்மா மற்றும் தொழில் மீது இதனை சத்தியம் செய்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கூறுவதால் விஷால் தன் வாழ்க்கையை அழித்தாலும் பரவாயில்லை அல்லது தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, அப்போதும் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர்தான் என்பதை தைரியமாக சொல்வேன்' என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும் விஷால் தனது படங்களில் நடிக்கும் பல பெண்களுடன் படுத்துள்ளார் என்றும் அவருடன் படுத்த பெண்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் என்றும் கூறிய ஸ்ரீரெட்டி, விஷால் பணம் கொடுத்து உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் யார் யார் என்பதும், அவருக்கு பெண்களை யார் சப்ளை செய்வதும் யார் யார் என்பதும் தனக்கு தெரியும் என்று தனது முகநூல் பதிவில் படுமோசமாக ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments