close
Choose your channels

நடிகர்களை அடுத்து சச்சினையும் வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

Wednesday, September 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தான் கூறிய குற்றச்சாட்டுக்களால் எந்தவித பிரதிபலனும் கிடைக்காத ஏமாற்றத்தில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினை வம்புக்கு இழுத்துள்ளார்.

சச்சின் மீது இதுவரை சூதாட்ட புகார் உள்பட எந்தவித புகாரும் எழுந்ததில்லை. மிஸ்டர் க்ளின் என்ற பெயரெடுத்துள்ள சச்சின், ஐதராபாத் வந்தபோது பிரபல நடிகை ஒருவரை சந்தித்ததாகவும் இந்த சந்திப்புக்கு ஒரு முக்கிய நபர் உடந்தை என்றும் வழக்கம்போல் தனது முகநூலில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் மிது பாலியல் குற்றச்சாட்டு கூறினால் இலவச விளம்பரம், சினிமாவில் நடிக்க வாய்ப்பு மற்றும் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த ஸ்ரீரெட்டிக்கு சில நாட்கள் பரபரப்புக்கு பின் தான் நினைத்தது ஒன்றுமே நடைபெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் இதனையடுத்தே அவர் தற்போது கிரிக்கெட் வீரர் மீது அதுவும் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் என்று மதிக்கப்படும் சச்சினை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர். இப்படியே போனால் ஸ்ரீரெட்டி எல்லை மீறுவார் என்பதால் உடனடியாக காவல்துறையினர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.