close
Choose your channels

மணிரத்னம் படத்தை தயாரிப்பது உண்மையா? ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் விளக்கம்

Thursday, April 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளிவந்த 'ஓகே கண்மணி' வெற்றி திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி, சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, இயக்குனர் மணிரத்னம் அவர்களை சந்தித்ததாகவும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மட்டுமே தங்கள் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.