நடிகை ஸ்ரீதேவியின் 50 வருடங்களும், 300வது படமும்...

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது. கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் 'துணைவன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 'நம்நாடு', சிவாஜிகணேசனுடன் 'வசந்தமாளிகை' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதன் பின்னர் 1976ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக மாறினார். நாயகியான பின்னர் அவர் கொடுத்த வெற்றி படங்கள் கணக்கிலடங்காது. கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ராசியான ஜோடியாக வலம் வந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவரவுள்ள 'மாம்' திரைப்படம் அவரது 300வது படம் ஆகும். இந்த படத்தை அவர் அறிமுகமான முதல் படம் வெளியான அதே ஜூலை 7ஆம் தேதி வெளியிட ஸ்ரீதேவியின் கணவரும் 'மாம்' படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் நான்கு மொழிகளுக்கும் அவரே டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்

More News

உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு புது வழி காட்டும் சங்கமித்ரா

பிரபல இயக்குனர் ராம்நாராயணன் அவர்கள் 100 படங்கள் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனர். தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பட படங்கள் தயாரித்து கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அவரது கொள்கை குறைந்த பட்ஜெட்டில் பெரிய ஸ்டார் இல்லாமல் மினிமம் கியாரண்டி படம் கொடுக்க வேண்டும் என்பதே. அவர

ஹாலிவுட் பட தொடக்கவிழாவில் பிரபல எழுத்தாளருடன் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த 'சங்கமித்ரா' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே...

வெற்றிக் கதவை திறந்துவிட்டோம்: 'சங்கிலி புங்கிலி' பட நிறுவனம் பெருமிதம்

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் அதனையடுத்த வார நாட்களின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது...

சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றியும் கடைசி சலுகையும்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

பிரபல காமெடி நடிகர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

பிரபல காமெடி நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பாலாஜி மீது அவர் மனைவி தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.