சூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்? மானஸியின் ஆனந்தக்கண்ணீர்

  • IndiaGlitz, [Saturday,September 18 2021]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பும் பணி ஒரு வாரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியில் வென்றவர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக ஸ்ரீதர் சேனா வாக்குகளின் அடிப்படையில் தேர்வு பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இதனை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஸ்ரீதர் சேனா இறுதிக்கு தேர்வானார் என்ற அறிவிப்பு வந்ததும் மானஸி ஆனந்த கண்ணீர் வடித்த காட்சியும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் திடீர் டுவிஸ்ட்டாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஆறாவதாக ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுகிறார் என நடுவர்கள் தெரிவித்தனர். அந்த ஆறாவது போட்டியாளர் மானஸி என்று அறிவிக்கப்பட்டதும் மானஸி மிகுந்த மகிழ்ச்சியடைந்து மீண்டும் ஆனந்தக்கண்ணீரில் நனைந்தார்.

எனவே சூப்பர் சிங்கர் சீசன் 8 இறுதிப் போட்டியில் முத்துச்சிப்பி, பரத், அனு ஆனந்த், அபிலாஷ், சிறிசேனா, மானஸி ஆகிய 6 பேர் இடம் பெறுகிறார்கள் என்பதும், இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது அடுத்த வாரம் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன? பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

சர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்!

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டார்கள் என்பதும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆபாச பேச்சு காரணமாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

ஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா? கோலி குறித்த அடுத்த பரபரப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி வருகிறார்

போலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்?

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை நேற்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை