close
Choose your channels

உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்!

Wednesday, October 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘அசுரன்’ பட நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர், மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீஸ் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த புகாரில் இயக்குனர் ஸ்ரீகுமாரால் என் உயிருக்கு ஆபத்து என்றும், தான் கையெழுத்து போட்டுக்கொடுத்த லெட்டர்பேட், செக் போன்ற சில ஆவணங்களை அவர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகௌம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுவாரியரின் இந்த புகாருக்கு இயக்குனர் ஸ்ரீகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பத்திரிகைகளில் பார்த்தே உங்கள் புகாரைத் தெரிந்துகொண்டேன். காரியம் முடிந்ததும் கைவிட்டுவிட்டு செல்பவர்தான் மஞ்சுவாரியர், அவரை நம்ப வேண்டாம் என்று என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வரும் போது, வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவில்லை. அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்தேன். அப்போது, அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்ததாக நீங்கள் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் நான் சந்தித்துவிட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.