close
Choose your channels

இறந்து போன மனைவியை வீட்டு விசேஷத்திற்கு தத்ரூபமாக வரவழைத்த கணவர்! ஆச்சரிய தகவல்

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது இறந்து போன மனைவியை தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு தத்ரூபமாக வரவழைத்த சம்பவம் உறவினர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

கர்நாடகா மாநிலம் பெல்லாரி என்ற பகுதியை சேர்ந்த சீனிவாச குப்தா என்ற தொழிலதிபர் பிரம்மாண்டமான வீடு கட்டி வந்தார். வீட்டின் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென அவருடைய மனைவி விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.

தனது மனைவிக்காக ஆசை ஆசையாய் கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியின்போது அவர் இல்லையே என்று வருத்தமடைந்த சீனிவாச குப்தா, மனைவியை போலவே அச்சு அசலாக மெழுகு பொம்மையை செய்தார். மனைவிக்கு பிடித்த பிங்க் நிற சேலையுடன் கூடிய அந்த மெழுகு பொம்மை அச்சு அசலாக உயிருடன் அவர் மனைவி இருப்பது போலவே இருந்ததை பார்த்து உறவினர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

சீனிவாசகுப்தாவின் இரண்டு மகள்களும் தங்கள் அம்மா உயிருடன் மீண்டும் வந்தது போலவே மகிழ்ச்சி அடைந்து அந்த மெழுகு பொம்மையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த மெழுகு பொம்மையால் தனது மனைவியே நேரில் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாக சீனிவாச குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.