close
Choose your channels

ஓட்டு போட்டா கர்ஜிப்பேன், போடலைன்னா சின்னதா குரல் கொடுப்பேன்: தமிழ் நடிகையின் பிரச்சாரம்!

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்கு ஓட்டு போட்டால் சட்டமன்றத்தில் உங்களுக்காக கர்ஜிப்பேன் என்றும் ஓட்டு போடவில்லை என்றால் சின்னதாக குரல் கொடுப்பேன் என்றும் தமிழ் நடிகை ஒருவர் மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் ’எனக்கு ஓட்டு போட்டு என்னை எம்எல்ஏ ஆக்கினீர்கள் என்றால் நான் சட்டமன்றத்தில் உங்கள் பிரச்சனைக்காக கர்ஜிப்பேன் என்றும் ஆனால் எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் என்னால் சின்னதாக தான் குரல் கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

உங்களுக்காக நான் எப்பொழுதும் குரல் கொடுக்க தயார் என்றும் ஆனால் கர்ஜிக்க வேண்டுமா? அல்லது சின்னதாக குரல் கொடுக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தில் ஒரு எம்எல்ஏ சரியாக பணிபுரியவில்லை என்றால் அந்த எம்எல்ஏவை தூக்கி விடுவார்கள் என்றும் உங்களுக்கு நான் சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்னை தூக்கி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல்வாதி அல்லது அமைச்சர் ஏழையாக இருக்கின்றாரா? ஓட்டுப்போடும் நீங்கள்தான் ஏழையாக இருக்கின்றீர்கள். எனவே அதை சிந்தித்து பார்த்து ஓட்டு போடுங்கள் என்று ஸ்ரீப்ரியா பிரச்சாரம் செய்தார். ஸ்ரீபிரியாவின் இந்த பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.