முதல்வர் வேட்பாளர் கமல்தான்: இணைப்புக்கு முன்னரே பிரபல நடிகையின் சர்ச்சைக்கருத்து

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து களப்பணிகள் செய்து வருகிறார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க அனைத்து பணிகளையும் முடித்து தயார் நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை சமாளிக்க ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இருதரப்பிலும் உள்ள சிலர் கூறி வந்ததை அடுத்து தற்போது இருவரும் இணைய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான ஸ்ரீப்ரியா கமல், ரஜினி இணைப்பு குறித்து கூறியபோது, ‘கமல், ரஜினி இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பது எனது எண்ணம்’ என்று கூறியுள்ளார். ஸ்ரீப்ரியாவின் இந்த கருத்து இரு தரப்பினர்களிடையே சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல், ரஜினி இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்து, ஆட்சியை பிடித்த பின்னர் பேச வேண்டியதை இணைப்புக்கு முன்னரே பேசி இணைப்புக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார் என்று பெரும்பாலானோர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 

More News

அண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு!

நடிகர் தனுஷ் தனது அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

நயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும்

தெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம்

ரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி!

சமூக வலைதளங்களில் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் எவ்வாறு மோதிக் கொள்கின்றார்களோ அதேபோல் பல ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்

நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது