close
Choose your channels

விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

Tuesday, September 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட், டோலிவுட் திரையுலக பிரபலங்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. விளம்பரத்திற்காக அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியாக கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இன்னும் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டுக்கள் விழப்போகின்றதோ தெரியவில்லை

இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி நன்றி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஷால், 'நடிகை ஸ்ரீரெட்டிக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி ஜாக்கிரதையாக இருப்பார்கள். தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்து விடுவார்கள்;' என்று கூறினார்.

செய்தித்தாளில் வெளியான இந்த பேட்டியை அப்படியே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஸ்ரீரெட்டி, விஷாலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.