close
Choose your channels

நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன்: டுவிட்டர் பயனாளிக்கு பதிலடி கொடுத்த 'அருவி' தயாரிப்பாளர்

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து இரண்டு விஜேக்கள் பேசிய விவகாரம் திரையுலகினர்களை கொதிப்படைய செய்துள்ளது. இயக்குனர் விக்னேஷ்வரன், விஷால் உள்பட பல திரையுலகினர் அந்த இரண்டு விஜேக்களுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் 'அருவி' படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், 'தம்பி பிரபு நீ கிழம்பு! அருவி போல தரமான படத்தில தளபதி பத்தி தப்பா பேசின ஆளு நீ , நீ எல்லாம் பஞ்சாயத்து பேசலாமா? என்று கமெண்ட் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கூறிய எஸ்.ஆர்.பிரபு, 'உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல...நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால... மூடிட்டு போ!! என்று பதிலடி கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.பிரபுவின் இந்த பதிலடிக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.