அரை வேக்காட்டு நபர்களின் வசூல் விபரங்கள்: எஸ்.ஆர்.பிரபு ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனால் சனிக்கிழமையே அந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை சில டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கே புதுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் கூறியதாவது: சில அரைவேக்காடு நபர்கள் ஒரு திரைப்படத்தின் வசூல் குறித்த தவறான தகவல்களைப் பகிர்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்வதாக நினைத்து சில தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் நாம் வேதனைப்படுத்திவிடக்கூடாது. ரசிகர்களே.. உங்கள் ஹீரோவின் படம் நன்றாக இருந்தால் கொண்டாடிவிட்டுப் போங்கள். அதைவிடுத்து வசூல் குறித்து உங்களுக்கு என்ன அப்படி கவலை' என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபுவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றனர். ஒருசில தயாரிப்பாளர்களே டுவிட்டர் பயனாளிகளுக்கு பணம் கொடுத்து வசூல் குறித்த மிகையான தகவல்களை பகிர சொல்வதாகவும் கமெண்ட்டுக்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.