மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் மாஸ் பதிவு.. இணையத்தில் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவனாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது கிரிக்கெட் வரலாற்றிலேயே முத்திரை பதிக்கும் ஒரு போட்டியாக கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ’பாகுபலி’ இயக்குனர் எஸ எஸ் ராஜமெளலி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. 292 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடிய போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. ஒரு கட்டத்தில் ஏழு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது

ஆனால் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இணைந்து புதிய வரலாற்று சாதனை படைத்தனர். பேட் கம்மின்ஸ் ஒருபக்கம் விக்கெட்டை பாதுகாத்துக் கொள்ள இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 201 ரன்கள் அடித்தார். இடையில் அவருக்கு காலில் அடிபட்ட போதிலும் ரன்கள் ஓடாமல் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்த வெற்றி குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். மேக்ஸ்வெல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ் என்று கூறியுள்ளார்.

More News

வெளியில என்ன பேசுறாங்கன்னு கரெக்டா ஊகித்த தினேஷ்.. மாயா கேங்கிற்கு ஆப்பு?

 மாயா கேங்கில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக அராஜகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கேங்கில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும்

மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!

மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க' என்று நகைச்சுவைடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அனுஷ்கா? 50 வது படமாக அமையுமா?

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாலை விபத்தில் மரணமடைந்த தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ: பூர்ணிமாவின் அதிர்ச்சி கேள்வி

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  பிரதீப் மீது குற்றஞ்சாட்டி வெளியே அனுப்பி வைத்த மாயா மற்றும் பூர்ணிமா குரூப் தற்போது எல்லை மீறி இரட்டை அர்த்தங்களில் ஆண்களிடம் பேசுவது பெரும்