close
Choose your channels

என்னைப்பற்றி நினைத்தே தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் ஸ்டாலின்...! எடப்பாடியார் நக்கல் பேச்சு...!

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்வராவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு, நித்தம் என்னைப்பற்றி சிந்திப்பதால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்று ஸ்டாலின் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக,திமுக,அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் கடும் வெயில் என்று பாராமலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக, இம்முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு, "விடியலை நோக்கி" என்ற ஸ்டாலினின் குரல் எங்கும் ஒலித்து வருகிறது. 234 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றிபெறுவோம் என்று கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார் முக.ஸ்டாலின். முக்கியமாக அதிமுக-வை வெற்றிபெற விடக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.

இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக-வை பற்றி பேசி புரட்டி எடுத்து வருகிறார் என்று சொல்லலாம். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று கூறுகிறார். அவர் எத்தனை அவதாரம் எடுத்தாலும் கனவு பலிக்காது. தினமும் என்னைப்பற்றியே நினைத்து பேசிவரும் ஸ்டாலின், தூக்கமில்லாமல் தவித்து வருகிறார் போல என்று பழனிச்சாமி அவர்கள் கிண்டலாக பேசியுள்ளார். மேலும் நீங்கள் என்னை சந்திக்க வேண்டுமென்றால் , உடனே சந்திக்கலாம், நான் உங்களில் ஒருவன். ஆனால் ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட உங்களால் தொட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.