நட்சத்திர தம்பதிகளின் கார் மீது மோதிய சரக்கு வாகனம்.. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,December 11 2022]

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதிகள் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதிய நிலையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை நபனிதா தாஸ் என்பவர் ஜீது கமல் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதியினர் தெலுங்கு திரையுலகில் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நபனிதா மற்றும் ஜீது கமல் காரில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதனால் சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கும் நபனிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரையும் கொலை செய்து விடுவதாக சரக்கு வாகனத்தில் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் கூறியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நபனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து பதிவு செய்த வீடியோ ஆதாரத்துடன் போலீசில் நபனிதா புகார் அளித்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நபனிதா மற்றும் அவரது கணவர் மீது சரக்கு வாகனத்தின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .