ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளும் அவற்றின் கேப்டன்களும்

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் கேப்டன்களும் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்நிலையில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சென்னை சிங்கம்ஸ் அணிக்கு சூர்யாவும், மதுரை காலேஜ் அணிக்கு விஷால் அவர்களும், கோவை கிங்ஸ் அணிக்கு கார்த்தியும், நெல்லை டிராகன்ஸ் அணிக்கு ஜெயம் ரவியும், ராம்நாடு ரினோஸ் விஜய் சேதுபதியும், தஞ்சை வாரியர்ஸ் அணிக்கு ஜீவாவும், சேலம் சேட்டாஸ் ஆர்யாவும், திருச்சி டைகர்ஸ் அணிக்கு சிவகார்த்திகேயனும் கேப்டன்களாக இருப்பார்கள். இவர்கள் தலைமையில் விளையாடும் வீர்ர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

மேற்கண்ட அணிகளின் அறிமுகவிழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த அணிகளை சீயான் விக்ரம் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-சிம்புவை துருக்கியில் இணைத்து வைத்த கவுதம் மேனன்

கோலிவுட் திரையுலகில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் இயக்குவது என்பது அரிதினும் ...

'கத்தி' தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் குறித்த தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'கத்தி'. இந்த படத்தின் ரீமேக்கில்தான் தெலுங்கு...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் முன்னணி ஹீரோயின்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'ரஜினிமுருகன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களின்...

கார்த்தியை இயக்கும் விஜய்யின் வெற்றி இயக்குனர்

இளையதளபதி விஜய் கேரியரில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் என்றால் முதல் வரிசையில் இருப்பது 'போக்கிரி'தான்...

காலையில் சென்னை. மாலையில் ஐதராபாத். சூர்யாவின் மெகா திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை...