'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதை என்பதால் இந்த படத்தில் கால்பந்து போட்டிகள் குறித்தும், விளையாட்டில் உள்ள அரசியல் குறித்தும் ஆழமான, அழுத்தமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படத்தின் பெயரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பயன்படுத்தி உள்ளது. ’கால்பந்து - தளபதி விஜய் - பிகில்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’ஏன் இந்த டுவீட்? இன்னும் மூன்று நாட்களில் ’இந்தியன் சூப்பர் லீக்’ கால்பந்து போட்டிகள் தொடங்குகிறது என்பதற்கான நினைவூட்டல் என்றும் குறிப்பிட்டுள்ளது

கிரிக்கெட்டில் ஐபிஎல் போலவே கால்பந்தில் ’இந்தியன் சூப்பர் லீக்’ போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு அந்த போட்டியை ரசிகர்களிடையே விளம்பரப்படுத்த வரும் தீபாவளி அன்று வெளிவரும் கால்பந்து விளையாட்டு திரைப்படமான ‘பிகில்’ திரைப்படத்தை சரியான நேரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பயன்படுத்தி விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது

அப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்!

கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என்பது தெரிந்ததே. ஒரு படம் முடிவடைதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி, அடுத்தடுத்து

'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று

திமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு அவருக்கு நெருக்கமானவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

அமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா!

'கௌன் பனேகா குரோர்பதி' என ஹிந்தியில் அமிதாப் பச்சனும், 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்று தமிழில் சூர்யாவும் நடத்திய நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே.