'மாநாடு'க்கு முன் சிம்பு நடிக்கும் புதிய படம்: படப்பிடிப்பு தொடங்கியது

  • IndiaGlitz, [Saturday,June 15 2019]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான பணிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'மாநாடு' படத்திற்கு முன் ஒரு புதிய திரைப்படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள சிம்பு, அந்த படத்தின் படப்பிடிப்பிலும் இன்று கலந்து கொண்டார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். சிம்பு இந்த படத்தில் கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் கன்னடத்தில் இயக்கிய நார்தன் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார்.