சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்று சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய அதிகாலை காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு KDM லைசென்ஸ் இன்னும் கிடைக்காததே அதிகாலை காட்சி ரத்துக்கு காரணம் ஆகும். மேலும் இன்றைய முதல் காட்சி எப்போது ஆரம்பிக்கும் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது

மேலும் இதே பிரச்சனை காரணமாக நேற்று அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த படத்தை வெளியிட தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டபோதிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சிம்பு ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.