முதன்முதலாக ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் சிம்பு

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனராக மட்டுமின்றி ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளரும் என்பது அனைவரும் தெரிந்ததே. அவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ரங்கூன்'
'ரங்கூன்' படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மாலை 5 மணிக்கு 'நீ இல்லா ஆகாயம்' என்ற சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் சிங்கிள் பாடலை சிம்பு வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபாரின் ரிட்டர்ன் என்ற சிங்கிள் பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதம் கார்த்திக், சனா, லாலு, பிரசாந்த் நாயர், டேனியல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் முருகதாஸ் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்களுக்கு விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இசையமைத்துள்ளார். இவர்களில் விக்ரம் என்பவர் ஜி.வி.பிரகாஷின் உதவியாளர் ஆவார். இந்த படத்தின் பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

More News

சிஸ்டம் சரியில்லை. ரஜினியின் கருத்து குறித்து கமல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கடந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துக்களை கூறினார். ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்...

ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் 'பாகுபலி 2' டெக்னீஷியன்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன...

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் கூறியது என்ன?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் தமிழில் தொடங்கவுள்ளது...

ஓபிஎஸ்-க்கு எதற்கு ஆயுத பாதுகாப்பு? நாஞ்சில் சம்பத்

முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது அணி தரப்பில் உள்துறை அமைச்சகத்தில் கடந்த சில நாடுகளுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது...

விஜய் பட இயக்குனரிடம் சமந்தா வைத்த வேண்டுகோள்

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா கையில் தற்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளது. அவருக்கும் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவர் ஆறு படங்களையும் முடித்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது....