வானத்தில் இன்று இரவு தோன்றும் ஸ்ட்ராபெரி சந்திரக் கிரகணம்!!! எப்போது பார்க்க முடியும் தெரியுமா???

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

பொதுவாக சந்திக்கிரகணம், சூரியக் கிரகணம் என்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பொது மக்களையும் சுவாரசியத்திற்குள் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு. இந்தாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இரவு நடக்க விருக்கிறது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு இந்த சந்திரக் கிரகணம் நடைபெற இருக்கிறது. ஜுன் 5 ஆம் தேதிக்கும் ஜுன் 6 ஆம் தேதிக்கும் இடையில் சரியாக இந்திய நேரப்படி இரவு 11.15 இருந்து 12.45 மணிக்கு இந்தக் கிரகணத்தைப் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் 12.45 மணிக்கு இந்த நிகழ்வை மிகவும் அழகாக கண்டு களிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சூரிய ஒளியை சந்திரன் மீது பாடாமல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி சென்று மறைத்துக் கொள்வதைத்தான் சந்திரக் கிரகணம் எனச் சொல்கிறோம். பூமி இடையில் செல்லும்போது சந்திரனிடம் இருந்து வரும் ஒளி நிறுத்தப்படுகிறது. தற்போது நிகழவிருக்கும் இந்த அற்புதக் காட்சியை விஞ்ஞானிகள் Penumbral lunar Eclipse எனக் குறிப்பிடுகின்றனர். சந்திரனின் ஒளியானது முற்றிலும் இருட்டாக இருப்பதால் மேலும் இந்நிகழ்விற்கு ஸ்ட்ராபெரி மூன் கிரகணம் எனவும் கூறப்படுகிறது. ஸ்ட்ராபெரி மூன் என்று சொன்னவுடனே நிலா மிகவும் சிவப்பாக இருக்கும் எனப் பெரும்பாலும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் சந்திரன் இருட்டாக இருக்கும் நிகழ்விற்குத்தான் நம்முடைய விஞ்ஞானிகள் ஸ்ட்ராபெரி மூன் எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரெயில்வே டிராக்கில் அன்னை இறந்தது தெரியாமல் பால் குடிக்கும் குழந்தை: அதிர்ச்சி புகைப்படம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் ரயில்வே நிலையம் ஒன்றில் அன்னை இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தை ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே 

3000ஐ தாண்டிய ராயபுரம், 2000ஐ தாண்டிய 3 மண்டலங்கள்: சென்னை தாங்குமா?

சென்னையில் கடந்த 4 நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல்அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனா பரவுதலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி

தற்கொலைக்காக விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி, திடீரென அலறியதால் பரபரப்பு

தற்கொலை செய்துகொள்வதற்காக லாட்ஜில் ரூம் போட்டு விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி திடீரென உயிர் பயம் வந்து அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா? முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா சமிபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த

கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.