தோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு!

சென்னை சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் உருவப்படத்தை கோலமாவு கொண்டு புதுச்சேரியை சேர்ந்த ஓவியக் கல்லூரி மாணவி ஒருவர், ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியம் சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் சென்னை சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சிஎஸ்கே கேப்டன் தோனியை பாராட்டும் விதமாக அவரது ஓவியத்தை 12 அடி உயரம் 12 அடி அகலத்திற்கு கோலமாவுக் கொண்டு மாணவி அறிவழகி வரைந்துள்ளார். இவர் புதுச்சேரி ஓவியக் கல்லூரியில் பயின்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

7 கிலோ கோலமாவைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தை வரைவதற்கு அறிவழகி 2 நாட்களாகத் தொடர்ந்து வரைந்துள்ளது. மஞ்சள் வண்ணத்தில் கண்ணை கவரும் வகையில் தல தோனியின் ஓவியத்தை வரைந்த மாணவி அறிவழகியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த ஓவியம் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரைப் போலவே கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தோனியின் ரசிகர் ஒருவர் அவருடைய வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றியுள்ளார். வீட்டின் முகப்பில் தோனியின் ஓவியத்தையும் வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடியா? ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்!

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தேனியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று காண்போரை நிர்வாணமாகக் காட்டும்

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போதும் கூட இளம் நடிகைகளுக்கு இணையாக சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி தற்போது 'கோடியில் ஒருவன்' 'தமிழரசன்' 'அக்னிசிறகுகள்' 'காக்கி' மற்றும் 'பிச்சைக்காரன் 2' ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

சமந்தாவின் இன்னொரு படத்தின் அறிவிப்பு: இரட்டை இயக்குனர்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா, பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

விவேக் சாருக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்: ஆர்யா

விவேக் அவர்களுக்கு கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன் என நடிகர் ஆர்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.