close
Choose your channels

நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மரணம்

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் என்ற பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மாற்றுத்திறனாளி மகள் சந்தியா நேற்று நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். அந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுதி முடித்துவிட்டு, மீண்டும் சந்தியா பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென பேருந்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே பேருந்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சந்தியா ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தது அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.